வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், இன்னும் பத்து நாட்களில் விஜய்யின் அடுத்த பட அப்டேட் தெரியவரும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் யார் யார் பணிபுரிந்து வருகிறார்கள், யார் யார் நடிக்கிறார்கள் உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.
வாரிசு படத்தில் குடும்பம், பாசம், அன்பு பற்றிய கதையைத் தேர்ந்தெடுத்த விஜய், தளபதி 67 படத்தில் முழுக்க முழுக்க துப்பாக்கி, கத்தி சண்டை என வன்முறை பக்கம் தாவ இருக்கிறார். முழுக்க முழுக்க சண்டை படமாக இது உருவாகும் என கூறப்படுகிறது.
விக்ரம் படத்தில் மிகச் சிறந்த வித்தைகளைக் காட்டி கமல்ஹாசனையே வியக்க வைத்தவர்கள் ரெட்டையர்களான, அன்பு அறிவு மாஸ்டர்கள். இவர்களே தளபதி 67 படத்திலும் தொடர்வார்கள் என தெரியவந்துள்ளது.
அன்பறிவு மாஸ்டர்கள் வித்தியாசமான அணுகுமுறைகளை இந்த படத்தில் உபயோகிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
தளபதி 67 படத்தில் பாடல்கள் இருக்கிறதா? என்றுதான் பலரும் சந்தேகிக்கிறார்கள். விஜய் படத்தின் வியாபாரத்துக்கு பாடல்கள் நிச்சயம் உதவும் என்பதால் இந்த படத்தில் பாடல்கள் இருக்கிறது ஆனால் அவை படத்தில் பெரிய அளவில் பயன்படுத்தப்படாது என்றே கூறப்படுகிறது. இம்முறை முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் 2 பாடல்களை மட்டுமே படத்தில் வைக்கவிருக்கிறார்களாம். கூடவே பல இசைக் கோர்வைகளும் இருக்கப்போகிறதாம். அனிருத் இசையில் தெறிக்கப்போகிறது.
அனிருத் ஸ்டைலில் ஆங்கிலப் பாடல்களும் படத்தில் இருக்கும் என நம்பலாம்.
தீரஜ் வைத்தி, ரத்னகுமார் இருவரும் கூடுதலாக வசனம் எழுதுகிறார்கள். திரைக்கதையை எழுதி முடித்துவிட்ட லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பிலேயே டயலாக்குகளை எழுதி படம்பிடிக்கிறார்கள்.
விஜய்யுடன் இந்த படத்தில் பிரித்விராஜ், மிஷ்கின், நிவின் பாலி, சஞ்சய் தத் உள்ளிட்டோர் வில்லனாக நடிக்கிறார்களாம். இவர்கள் அனைவருக்கும் விஜய்யுடன் காட்சி இருப்பதுதான் இதில் ஹைலைட்ஸ் என்கிறார்கள். இவர்களுடன் மன்சூர் அலிகானும் படத்தில் இருக்கிறாராம். ஆனால் அவர் வில்லன் இல்லை என கூறப்படுகிறது.
இப்போது வரையில் மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் இருவரும் உறுதியாக படத்தில் நடிப்பது தெரியவந்துள்ளது. மிஷ்கினும் படத்தில் இருப்பது நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து வந்த தகவல்.
வாரிசு படம் திரையில் வெற்றிகரமாக சென்றுகொண்டிருப்பதால், அடுத்த படம் குறித்த அப்டேட் பொங்கலுக்கு வெளியாகாது. அது இன்னும் 10 நாட்கள் கழித்து ஜனவரி 22ம் தேதி ஞாயிறன்று வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதனைத் தொடர்ந்து ஜனவரி 26ம் தேதியும் ஒரு அப்டேட் காத்திருக்கிறதாம்.
முதல் அப்டேட்டாக வெளியாகவிருப்பது டைட்டில் என்கிறார்கள். வழக்கமாகவே விஜய் பட டைட்டில்கள் படம் துவங்கும்போது வெளியாகாது. ஆனால் இந்த முறை நிச்சயம் பட டைட்டிலுடன் வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளனராம் படக்குழுவினர்.
கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்புதான் அதற்கு காரணம் என்கிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…