கமல்ஹாசன் குரலில் ஆரம்பித்த பொன்னியின் செல்வன், அருள்மொழி வர்மன் மரணித்ததாக சோழர் வம்சமே நிலைகுலைந்து நிற்கும் காட்சியும் முடிவுற்றது முதல் பாகம். ஆனால் அருள்மொழி வர்மனை ஊமைராணி காப்பாற்றி விடுகிறாள் என்பது படம் பார்த்த அனைவருக்குமே தெரிந்த விசயம்தான். இனி பார்ட் 2.
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என படக்குழுவே அறிவித்துவிட்டது. வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி அதிகாரப்பூர்வமாக படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே இருக்கிறது, பெரிதாக அப்டேட் எதுவும் வரவில்லையே என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்க துவங்கவிட்டனர்.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி என அனைவருக்கும் பாடல்கள் இருக்கின்றனவாம். முதல் பாகத்தில் விக்ரமுக்கு ஒரு பாடல் என்றாலும் மற்ற அனைத்து பாடல்களும் கார்த்திக்குதான் வந்தது. ஜெயம் ரவிக்கு பாடல்கள் இல்லை என்ற குறை இந்த இரண்டாம் பாகத்தில் தீர்ந்துவிடும்.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ஆரம்பமே ஜெயம் ரவியின் காதல் பாடலோடு ஆரம்பமாகிறது. ஆம் ஜெயம் ரவி ஏற்று நடித்துள்ள கதாபாத்திரமான அருள்மொழி வர்மனுக்கான காதல் பாடல் வரும் காதலர் தினத்தன்று வெளியிடப்படுகிறதாம்.
பிப்ரவரி 14ம் தேதி காலை இந்த பாடல் வெளியிடப்படும் எனவும், இதில் ஜெயம்ரவி, ஷோபிதா நடித்திருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது. எனினும் இதுவரை அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. விரைவில் இந்த அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…