பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்களை ஈர்த்தவர் பிரபாஸ். இவருக்கும் திருமணம் நடக்கும் வாழ்த்து தெரிவிக்கலாம் என ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். மனுசன் பிடி கொடுக்காமல் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார். பல ரசிகர்கள் இதற்காக வருத்தப்பட்டது கூட உண்டு. அவரோ இப்போது திருமணம் செய்வார், அப்போது திருமணம் செய்வார் என அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
இடையில் அனுஷ்காவுடன் காதல், அவரையே திருமணம் செய்வார் என்றெல்லாம் புரளி கிளம்பியது. சில சமயங்களில் அவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதாக கூட செய்தி பரவின. ஒரு வழியாக அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சலார் மற்றும் ஆதி புருஷ் ஆகிய படங்களில் நடித்துள்ள பிரபாஸ் அடுத்தடுத்த வருடங்களில் மிகப் பெரிய வசூல் சக்ரவர்த்தியாக மாறுவார் என இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
ஆதி புருஷ் படத்தில் நடித்துள்ள பிரபாஸ், அவருக்கு ஜோடியாக நடித்துள்ள கீர்த்தி சனோனுடன் காதலில் விழுந்துவிட்டதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் பரவி வந்தது. இந்நிலையில் கீர்த்தி சனோனுக்கு பிரபாஸுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என ஒரு தகவல் இணையதளத்தை சுற்றி வந்துகொண்டிருக்கிறது.
மாலத்தீவில் வைத்து இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது. இந்த தகவல் தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை .
இம்முறையும் பிரபாஸ் ரசிகர்கள் வருத்தத்தில்தான் இருக்கிறார்கள். இது வெறும் புரளியாகத் தான் இருக்கும் என்கிறார்கள். ஏனென்றால் அனுஷ்கா திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும்போது அவரைத் தான் பிரபாஸ் திருமணம் செய்வார் என நம்பி வருகின்றனர். அவர்கள் நண்பர்கள்தான் இப்படி புரளி பரவி வருகிறது என அவர்களே சொன்னாலும் நம்ப மாட்டார்கள் போலிருக்கிறது. சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க பிரபாஸ். பாகுபலி படத்தை உண்மைனு நம்பிட்டிருக்காங்க சிலர்!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…