அண்ணாமலை திரைப்படம் ரஜினிகாந்தின் சினிமா வரலாற்றில் மிக முக்கிய படமாக அமைந்தது. இதில் இடம்பெற்றுள்ள பாடல் உத்வேகப் பாடலாகி இன்றும் பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருக்கிறது. ரஜினிகாந்த், குஷ்பு, சரத்பாபு, மனோரமா ஆகியோர் இணைந்து நடித்த இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
இந்நிலையில், வைரமுத்து பேசிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த வீடியோவில், ரஜினி தனது பெயரையும் பாட்டில் இணைக்கும்படி வைரமுத்துவிடம் கேட்டுள்ளது தெரியவந்துள்ளது.
வைரமுத்து கிட்டத்தட்ட பாடலை எழுதி முடித்துவிட்டாராம். அதில் கொண்டையில் தாழம்பூ, கூடையில் என்ன பூ, குஷ்பூ என வரும் அந்த பாடல். இதை கேட்டதும் ரஜினி.. அடடே சூப்பரா இருக்கே. ஆமா நம்ம பேரு ஏன் வரல.. குஷ்பூ பேரு மட்டும் வந்துருக்கு நம்ம பேரு வர்ற மாதிரி ஏதாது லிரிக்ஸ் சேருங்க என்றாராம்.
நிலைமையை சமாளிக்க வைரமுத்து அழகான கவிதையை பாடலாக எழுதியிருக்கிறார். என்றுமே ராஜா நீ ரஜினி என எழுதியதும் இப்போதான் நல்லா இருக்குனு சொல்லிட்டு விளையாட்டாக சொன்னாராம். இதனை வேடிக்கையாக ஒரு பேட்டியில் பகிர்ந்திருப்பார் வைரமுத்து.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…