சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ரஜினி நாயகனாக நடிக்க அந்த படத்தை நெல்சன்திலீப் குமார் இயக்கவுள்ளார். கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் பல லாஜிக் மிஸ்டேக்களை கொண்டது என பலரால் ட்ரால் செய்யப்பட்டு வந்ததால், நெல்சனுக்கு வழிகாட்டும் பொருட்டு கே எஸ் ரவிக்குமாரை ஸ்க்ரிப்ட் வேலைகளை கவனிக்கு ரஜினி அவரது உதவியை நாடியுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். கன்னட மொழி திரைப்படத்தின் சூப்பர் ஸ்டார் ஷிவ்ராஜ்குமார் இந்த படத்தின் வில்லனாக நடிக்கவுள்ளாராம். இப்படி தேசம் முழுக்க இருந்து நடிகர்களை நடிக்கவைத்து படத்தை ஹிட் செய்துவிடலாம் என எண்ணிக்கொண்டு இருக்கும் ரஜினிகாந்த், நெல்சன் எதைக் கொண்டு போய் நீட்டினாலும் ரிஜக்ட் செய்துவிடுகிறாராம்.
நல்ல காமெடி கதை வேண்டும் என்றுதான் நெல்சனை தேர்ந்தெடுத்தாராம் ரஜினிகாந்த். கதையைக் கேட்டுவிட்டுதான் நடிக்க சம்மதித்துள்ளார். ஆனால் இப்போது விக்ரம் மாதிரி ஆக்ஷன் திரைப்படம் வேண்டும் என்கிறார் என்று தகவல் கசிந்துள்ளது. இதனால்தான் தன்னுடைய கதையில் சிறு சிறு திருத்தங்களைச் செய்துள்ளார் நெல்சன். இப்போது அந்த படத்துக்கு மாஸான டைட்டில் வைக்க நெல்சன் 30 பெயர்களை எழுதிக் கொண்டு சென்றுள்ளார். ரஜினிக்கு எதுவுமே பிடிக்காமல், அனைத்தையும் ரிஜக்ட் செய்துவிட்டாராம்.
ரஜினிக்கு பிடித்தமாதிரி டைட்டில் வைக்க முடியாமல் கவலையில் உள்ளார் நெல்சன் திலீப்குமார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…