Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமலாபாலுக்கு ஏற்பட்ட அவமானம்.. கேரளத்தில் மறுக்கப்பட்ட உரிமை!

UDHAYA KUMAR Updated:
அமலாபாலுக்கு ஏற்பட்ட அவமானம்.. கேரளத்தில் மறுக்கப்பட்ட உரிமை!Representative Image.

கோவிலுக்குள் செல்ல நடிகை அமலாபாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கேரள மாநிலத்தில் உள்ள திருவைராணிக்குளம் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய ஆசைப்பட்டுள்ளார் நடிகை அமலாபால். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டு வெளியிலிருந்தே சாமி கும்பிட வற்புறுத்தப்பட்ட நிகழ்வு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிந்து சமவெளி, மைனா, தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பழக்கமாகி, ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தைப் பெற்றார்.  டாப் ஹீரோயினாக தமிழில் வலம் வந்த நேரத்தில் தெய்வத் திருமகள் படத்தின் இயக்குநர் ஏ எல் விஜய்யை காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் பின் மனக்கசப்பில் இருவரும் பிரிந்துவிட்டனர். 

இந்த பிரிவைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தாலும் அந்த அளவுக்கு இவரின் மீது ரசிகர்கள் ஈடுபாடு செலுத்தவில்லை. சில படங்களை இவரே தயாரித்தாலும் அந்த படங்கள் அவ்வளவு சிறப்பாக ஓடவில்லை. இப்படியாக அவ்வப்போது அமலாபால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் செய்திகள் வலம் வரும்.

இந்நிலையில், இப்போது அவரை கோவிலுக்குள் அனுமதிக்காத நிகழ்வு நடந்துள்ளது.  கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருக்கும் திருவைராணிக்குளம் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றுள்ளார் அமலாபால். ஆனால் அவர் கிறித்துவ மதத்தை சார்ந்தவர் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், கோவிலுக்கு எதிர்புறமிருக்கும் சாலையில் நின்று தரிசனம் செய்யுமாறு வற்புறுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்