நயன்தாராவுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் விசயம் என்னவென்றால், இந்த திருமணத்தில் நடிகை சமந்தா கலந்துகொள்ளவில்லை என்பதுதான்.
நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் இன்று அதிகாலை தொடங்கி நடந்து முடிந்தது. இந்த விழாவுக்கு மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் சினிமா துறையில் மிக நெருங்கியவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பலத்த பாதுகாப்புடன் திருமணம் நடைபெற்றிருந்த நிலையில், இந்த விழாவுக்கு யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதை பலரும் கவனித்து வந்தனர்.
புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்க அனுமதி இல்லாத நிலையில், மீடியாவில் எந்த நிகழ்ச்சியும் வெளியாகவில்லை. புகைப்படங்கள் கூட அவர்களே வெளியிட்ட ஒரு சில மட்டும்தான். மற்றபடி வெளியிலிருந்து யார் யார் செல்கிறார்கள் என்பதை மட்டும் படம்பிடித்து எழுதியுள்ளன ஊடகங்கள். எனினும் இந்த திருமண விழாவில் சமந்தா கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா கலந்துகொள்ளாததற்கு என்ன காரணம் என தெரியாமல் பலரும் குழம்பியுள்ளனர். சமீபத்தில்தான் இருவரும் சேர்ந்து நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…