மனோ என்றழைக்கப்படும் பாடகரின் இயற்பெயர் நாகூர் பாபு. பின்னணி பாடகராகவும், வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட், நடிகர், தயாரிப்பாளர், டிவி நடுவர் என பல்முகம் கொண்டவர் மனோ. இவரது பாடல்கள் பல தமிழக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடப்பட்டு வருகிறது. சில பாடல்கள் நாம் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார் என நினைத்திருப்போம். ஆனால் அவை மனோ பாடிய பாடல்களாக இருக்கும். அப்படி சிறந்த பத்து பாடல்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.
சாதனைகள்
தமிழில் மனோவை அறிமுகப்படுத்தியவர் இளையராஜா. முதல் பாடல் பூவிழி வாசலிலே படத்தில் வரும் அண்ணே அண்ணே...
அடுத்த பாடலே ரஜினிக்கு, வேலைக்காரன் படத்தில் பாடியிருந்தார். ரஜினிக்கு அவர் பாடிய முதல் பாடல் இதுதான்.
பின்னர் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் செண்பகமே செண்பகமே, பேச்சி பேச்சி, ஜிஞ்சனக்கு ஜனக்கு உள்ளிட்ட பாடல்களைப் பாடியிருந்தார்.
கமல்ஹாசனுக்கு மனோ பாடிய முதல்பாடல் நாயகன் படத்தில் வரும் நீ ஒரு காதல் சங்கீதம். சித்ராவுடன் சேர்ந்து இந்த பாடலை பாடியிருப்பார் மனோ.
பணக்காரன் படத்தில் வரும் இந்த பாடல் பட்டிதொட்டியெல்லாம் பயங்கரமான ஹிட் ஆனது. இப்பவும்கூட கல்யாண வீடுகளில் இதே பாடலைத் தான் போடுகிறார்கள். அந்த அளவுக்கு மிகவும் பிரபலமான பாடலாக உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…