பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா இன்று காலை 10.30 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவித்திருந்தது. அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது படத்தை லைகா தயாரிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக ட்வீட் மூலம் அறிவித்துள்ளது. இந்த படத்தை சூர்யா நடித்த ஜெய் பீம் பட இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கவுள்ளார். மேலும், அனிருத் இசையமைக்கவுள்ள இப்படம் ஜெய் பீம் போன்று உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ஒரு படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…