சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 42வது படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.
பாலாவும் சூர்யாவும் இணைந்து புதிய படம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டிருந்தனர். அதற்காக பாலா சூர்யாவின் தந்தை சிவக்குமாரைச் சந்தித்தும் பேசினார். மூவரும் புகைப்படம் எடுத்து அதை மகிழ்ச்சியாக வெளியிட்டனர். விரைவில் படம் உருவாகும் என அப்போது கூறப்பட்டது.
சூர்யா - ஹரி இணைப்பில் மீண்டும் ஒரு படத்தை உருவாக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த படத்துக்கு அருவா என பெயர் வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. பின்னர் சூர்யா படங்களை ஓடிடியில் வெளியிடக்கூடாது என ஹரி பேச, அது இருவருக்குள்ளும் மனக்கசப்பை உண்டாக்கி, ஹரி - அருண்விஜய் இணைந்து யானை படத்தை தந்தனர்.
இதனிடையே பாலா ஸ்க்ரிப்ட் தயார் செய்துவிட்டு வந்த நிலையில், அந்த படத்துக்கு வணங்கான் என பெயர் வைத்து ஷூட்டிங் சில நாட்கள் நடைபெற்றது. ஆனால் சில வாரங்களிலேயே பிரச்னை ஏற்பட்டு படப்பிடிப்பு தடைபட்டது.
சூர்யா சிறுத்தை சிவாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ஒரு பிரம்மாண்டமான படத்தில் கமிட் ஆனார். இந்த படத்தின் படப்பிடிப்பு முன்னதாகவே துவங்கி நடைபெற்று வந்தது. இடையில் வணங்கான் படப்பிடிப்பிலும் சூர்யா கலந்துகொண்டு நடித்து வந்தார்.
பெரும் பிரச்னையாகி படம் நிறுத்தப்பட்டு, சூர்யா படத்திலிருந்து விலகிவிட்டார் என்கிற செய்தி பாலா தரப்பிலிருந்தே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சூர்யா 42 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இனிதே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் கோவாவில் நடைபெற்றிருந்தது. அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் என சூர்யாவுக்கு 5 கதாபாத்திரங்களாம். ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…