பாலா இயக்கி வந்த வணங்கான் படம் கைவிடப்பட்டதை அடுத்து, சூர்யா நடித்து வந்த மற்றொரு படமான சூர்யா 42 படம் மிகப் பெரிய சாதனையைச் செய்துள்ளது. இதுதான் இப்போது கோலிவுட்டின் டாப் பேச்சாக பேசப்பட்டு வருகிறது.
சூர்யாவும் பாலாவும் வெகு நாட்களுக்கு பிறகு இணைந்து பணியாற்றிய படம் வணங்கான். இந்த படத்தை மிகவும் நேர்த்தியாகவும், கதையம்சம் கொண்ட படமாகவும் கொண்டு வந்து ரசிகர்களிடம் நல்ல பெயரை சம்பாதிக்க திட்டமிட்டிருந்தார் சூர்யா. ஆனால் பாலாவின் யோசனை வேறாக இருந்துள்ளது. அலட்சியமான மனப்போக்குடன், சூர்யாவை 15 வருடங்களுக்கு முன்பிருந்த ஆள் போல நடத்தியது அவருக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது. இது உள்ளிட்ட மற்ற சில பிரச்னைகளால் படம் கைவிடப்பட்டது.
ஆனால் சூர்யா இன்னொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். சிறுத்தை சிவாவின் படம்தான் அது. கோவா, சென்னை என பல இடங்களில் ஷூட்டிங் திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஹிந்தி உரிமை மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாம்.
சூர்யாவுக்கு இது மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இனி தமிழ் சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை என பல வகையில் படத்தை லாபத்துக்கு இப்போதே விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். கதை மீது நம்பிக்கை வைத்துள்ள சூர்யா இந்த படத்தினை மிகப் பெரிய பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…