தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சூர்யா. இவரது திரைப்படங்களுக்கென தமிழகம் மட்டுமின்றி கேரள, ஆந்திர, கர்நாடக மாநிலங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது
அடுத்தடுத்த படங்களுக்கென மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், சூர்யா நடிகராக மட்டுமின்றி சிறந்த தொழிலதிபராகவும் விளங்கி வருவதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. அவர் தற்போது மும்பையில் 200 கோடி ரூபாய் முதலீடு
செய்துள்ளதாக தகவல். அதனைத் தொடர்ந்து மேலும் சில தகவல்களும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
சென்னை, மதுரை, திருச்சி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் சிலவற்றின் பார்க்கிங் காண்ட்ராக்டை இவரின் நிறுவனம் பெற்றுள்ளதாக
கூறப்படுகிறது. இதன்மூலம் வருடம் 200 கோடிக்கும் அதிகமாக சம்பாதிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…