இந்தியா மட்டும் ஏன் உலகம் முழுவதும் கவனம் செலுத்தும் திரைப்படமாக திகழும் "தளபதி 67" படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தற்போது இருக்கும் சினிமா உலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து மொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ் அவர்கள். மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக தனது பயணத்தை தொடர்ந்த லோகேஷ் தனது இரண்டாம் படத்திலையே அனைவரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றிருக்கிறார். இவர் எடுத்த படங்கள் "கைதி", "மாஸ்டர்" மற்றும் "விக்ரம்" ஆகிய அனைத்து படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட்.
இதில் சிறப்பு என்னவெனில் ஒவ்வொரு படத்தின் முடிவு தான் இன்னொரு படத்தின் தொடக்கமாக வைத்து படங்களை எடுத்து வருகிறார். அதற்காக "லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ்" என்று மக்கள் அன்பாக பெயர் சுட்டியிருக்கின்றனர். இதில் கைதி, விக்ரம் படங்களை தொடர்ந்து தளபதி 67 படமும் அந்த யுனிவெர்ஸ் இல் இணைகிறது. எனவே, இந்த படத்திற்கு என்று நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. படப்பிடிப்புகள் ஆரம்பித்து விட்ட நிலையில் படத்தின் டைட்டில் என்னவென்று இன்று மாலை 5 மணிக்கு தெரிவிக்கப்படும் என்று லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக கௌதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா மற்றும் சஞ்சய் தத் ஆகியவர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். இது படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்து வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…