தளபதி 67 படத்தின் மெய்ன் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவருடன் நடந்த பேச்சுவார்த்தையில் பச்சைக் கொடி காட்டியிருப்பதால் விரைவில் அவர் படக்குழுவுடன் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மிகப் பயங்கர வில்லனான இந்த கதாபாத்திரம் பேசும் வசனங்கள் படத்தில் சில நிமிட காட்சிகளில் மட்டுமே வருமாம். ஆனால் பேச வேண்டியவற்றை செயலிலேயே காண்பிக்கும்படியாக கதை அமைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். காட்சிகளின் மூலமே இவர் யார் எத்தனை கொடூரமானவர் என்பதை மக்களுக்கு உணர்த்த முடிவு செய்திருக்கிறாராம் இயக்குநர்.
தளபதி 67 படத்தில் மொத்தம் 4 வில்லன்கள் இருந்தாலும் இவர்தான் மெய்ன் வில்லனாம். அப்படி ஒரு கதாபாத்திரத்துக்கு கேஜிஎஃப் வில்லனான சஞ்சய் தத்தான் மிகவும் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்துள்ளது படக்குழு.
சஞ்சய் தத் போக மிஷ்கின், நிவின் பாலி, கௌதம் வாசுதேவ் உள்ளிட்டவர்களும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சென்னையில் நடைபெற்று வரும் ஷூட்டிங் நிறைவடைந்த பிறகு காஷ்மீருக்கு பயணிக்கிறது படக்குழு. அங்கு மீண்டும் துவங்கும் படப்பிடிப்பு மொத்தம் 2 மாதங்கள் தொடர்ச்சியாக நடக்கிறதாம். முதல் முறையாக இந்த படத்தில் பகல் நேர காட்சிகளை எடுக்கிறாராம் லோகேஷ்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…