ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் புதிய படமான துணிவு இந்தியாவின் மிகப் பெரிய வங்கியில் நிகழ்ந்த உண்மை நிகழ்வை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறதாம். இதுகுறித்த முழு தகவல்களையும் இங்கே காண்போம்.
துணிவு படத்தின் டிரைலர் புத்தாண்டு தினத்தின் முந்தைய நாள் இரவு வெளியிடப்பட்டது. இது மிகப் பெரிய அளவில் பார்க்கப்பட்டு சாதனை புரிந்து வருகிறது. இது ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், படத்தின் கதை குறித்து ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
போனி கபூர் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 3 வது திரைப்படமான துணிவு, ஒரு உண்மைக் கதையாம். ஹெச் வினோத் சமூகத்தில் நிகழ்ந்த உண்மை கதையை எடுத்துக் கொண்டு அதை சினிமா வடிவத்துக்கு மாற்றி கொடுப்பதில் வல்லவர். அதன்படி, முதலில் சதுரங்க வேட்டை, அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களைக் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
தனது மூன்றாவது கதையாக துணிவு கதையைத் தான் எழுதியிருந்தாராம் ஹெச் வினோத். அஜித் - போனி வேண்டுகோளுக்கு இணங்க பிங்க் ரீமேக், வலிமை படங்களை எடுத்துக் கொடுத்துவிட்டு இந்த கதைக்கு நகர்ந்து வந்துள்ளார்.
1987ம் ஆண்டு பஞ்சாபில் நடந்த மிகப்பெரிய கொள்ளைச் சம்பவத்தை மையமாகக் கொண்டே இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறதாம். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கடந்த 1987ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி காலை லாரி மற்றும் வேனில் வந்திறங்கிய கொள்ளையர்கள் சாமர்த்தியமாக 5.7 கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அப்போதே இந்த கொள்ளை குறித்து பத்திரிக்கைகள் ஆங்கிலப் படம் போன்ற கொள்ளை எனும் ரீதியில் பரபரப்பாக எழுதின.
இந்நிலையில், இந்த படம் முதலில் 2022 தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் அதன்பிறகு, பொங்கல் ரேஸில் கலந்து கொள்வதாக முடிவெடுத்துள்ளனர் படக்குழுவினர். இந்த 2023 பொங்கலுக்கு வேற லெவல்ல காட்சிகள் இருக்கப் போகுது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…