தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் பலரும் வருடத்துக்கு ஒரு படம் என நடிப்பது, அவர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக, டிமாண்ட் செய்வதற்காக என கூறியுள்ளார் திருப்பூர் சுப்ரமணியன். இதனை ஆரம்பித்து வைத்தது ரஜினிகாந்த் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த திருப்பூர் சுப்பிரமணியன், தமிழ் சினிமாவின் இன்றைய நிலை சாபக்கேடு என கடுமையாக பேசியிருந்தார். இந்த நிலைக்கு யார் காரணம் தயாரிப்பாளர்களா நடிகர்களா என்றால் அது நடிகர்கள்தான் என குறிப்பாக உணர்த்தினார்.
பெரிய நடிகர்கள் அனைவரும் வருடத்துக்கு 1 படம் மட்டுமே நடிக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய சம்பளத்தை டிமாண்ட் செய்ய திட்டமிட்டு இப்படி செய்கிறார்கள். வருடத்துக்கு ஒரு படம் என்பதை ஆரம்பித்து வைத்தது ரஜினிகாந்த் தான். அவரே என்னிடம் கூறியுள்ளார். தனக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டதால் வருடத்துக்கு ஒரு படம் என நடிக்க இருப்பதாக தெரிவித்திருந்தாராம்.
இதையே ஃபாலோ செய்து வருடத்துக்கு ஒரு படம் நடித்து பெரிய ஹிட் எதுவும் கொடுக்காவிட்டாலும் அடுத்தடுத்த படங்களில் சம்பளத்தை உயர்த்திக் கொள்கிறார்கள் என கூறியுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியன்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…