பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்திலும் திரிஷாவை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார் திரிஷா.
வழக்கமாக மற்ற நடிகர்களின் படங்கள் என்றால் அந்த நாயகர்களின் ஜோடி என கூறிவிடலாம். ஆனால் கமல்ஹாசனின் படங்களில் அவருக்கு நிகரான கதாபாத்திரங்கள் வழங்கப்படும் இது தமிழக சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். விக்ரம் படத்தில் பெயர் தெரியாத ஒரு டான்ஸ் மாஸ்டருக்கு கூட டீனா கதாபாத்திரம் கொடுத்து கமல்ஹாசன் அளவுக்கு சண்டைகள் எல்லாம் வைத்திருந்தனர்.
கமல்ஹாசனுடன் ஏற்கனவே நடித்த மன்மதன் அம்பு, தூங்காவனம் உள்ளிட்ட படங்கள் திரிஷாவுக்கு அவ்வளவு வலிமையான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டன.
இதுகூடவே, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் கதாநாயகியாக நடிக்க திரிஷாவை அழைத்திருக்கிறார்களாம். இதனால் ஏகப்பட்ட குழப்பத்தில் இருக்கிறாராம் திரிஷா. இதுகுறித்து திரிஷாவின் நெருங்கிய வட்டாரத்திலிருந்து வந்த தகவலின் அடிப்படையில், ராங்கி படத்துக்கு பிறகு திரிஷா மிகவும் பிஸியாகி விடுவார் என்கிறார்கள்.
இந்நிலையில், மீண்டும் முதல்ல இருந்து துவங்குவது போல திரிஷா அஜித், விஜய்யுடன் ஜோடி போட காத்திருக்கிறார். பொன்னியின் செல்வனில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய திரிஷா இப்போது லோகேஷ் கனகராஜ் படத்துக்கு ஓகே சொல்லிவிட்டாராம். அடுத்து விக்னேஷ்சிவன் படமும் அவருக்காக காத்திருக்கிறது என்கிறார்கள்.
ஒருவேளை இரண்டு படங்களுக்கும் ஓகே சொல்லி நடித்தால், ஒரே நேரத்தில் அஜித் - விஜய் படங்களில் நடிப்பார் திரிஷா. இதனையடுத்து மணிரத்னம் படத்தில் நிச்சயமாக நடிப்பார் திரிஷா. இப்படி குந்தவை கதாபாத்திரத்துக்கு பிறகு திரிஷாவின் சினிமா பயணம் டாப் கியரில் தொடர் போகிறது பாருங்களேன்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…