அஜித், விஜய் போலவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவும் தனது அடுத்த மிகப் பெரிய வெற்றிக்காக காத்திருக்கிறார். விஜய்,அஜித் போல இவர் ஒரு நேரத்தில் ஒரு படம்தான் என லிமிட் செய்துகொள்வதில்லை. தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடிக்க கதைகளைக் கேட்டு வைத்துக் கொண்டு ஒரு பக்கம் ஒவ்வொரு படமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இடையிடையில் நல்ல படங்களில் கெஸ்ட் ரோலும் செய்து வருகிறார்.
சமீபத்தில் சூர்யா கடைசி நிமிடங்களில் தோன்றிய விக்ரம் திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. மேலும் ராக்கெட்ரி படத்திலும் கேமியோ செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி ஹிந்தியின் ரீமேக் ஆகும் சூரரைப் போற்று படத்திலும் சூர்யா கேமியோவில் தோன்றுகிறார். இப்படி சுறுசுறுப்பாக சுற்றி வரும் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என கூறப்படுகிறது.
இந்த படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படம் துவங்கவுள்ளது. இது சர்ப்ரைஸாக சூர்யா பிறந்தநாளன்று அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மோசன் போஸ்டர் அல்லது கிளிம்ஸுடன் படம் துவங்கும் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரகசியமாக வந்த தகவலின் அடிப்படையில் ஆகஸ்ட் மாத இறுதியில் வெற்றிமாறன் வாடிவாசல் ஷூட்டிங்கை துவங்குவார் எனவும், சூர்யா பாலா படத்தை முடித்துக் கொண்டு இதில் கலந்துகொள்வார் எனவும் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…