வம்சி இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாரிசு திரைப்படம் உலகம் முழுக்க 210 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது. இதனை படத் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே வேளையில், தெலுங்கு பதிப்பான வாரசுடு படத்தை யாரும் சீண்டவில்லை என்பது போல தெரிகிறது. அங்குள்ள தெலுங்கு நேரடி படங்களின் வசூல் காரணமாக வாரசுடுவுக்கு கலெக்ஷன் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.
விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த், சங்கவி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து கடந்த 11ம் தேதி வெளியான வாரிசு திரைப்படம் 100, 150, 200 கோடிகளை ஒவ்வொன்றாகத் தாண்டி வருகிறது. இந்நிலையில், இப்போதைய தகவலின்படி, உலகம் முழுக்க 210 கோடிகளை அள்ளியுள்ளது.
தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், இந்தி மாநிலங்கள், உலகின் மற்ற நாடுகள் அனைத்தும் சேர்த்து மொத்தம் 210 கோடி ரூபாய் வசூலை அடைந்து 7 நாட்களை நிறைவு செய்துள்ளது வாரிசு. தமிழகத்தில் மட்டுமின்றி தெலுங்கு மாநிலங்கள், கேரளம், கர்நாடகம் மற்றும் இந்தி பேசும் மக்களின் மாநிலங்களிலும் படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. ஆனால் தெலுங்கில் இந்த படத்துக்கு முதல் உரிமை கொடுக்கவில்லை தெலுங்கு மக்கள். அவர்களின் சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்கள் வெளியாகி பட்டையைக் கிளப்பி வருவதால் வாரசுடு படத்தின் வசூல் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…