பொங்கல் திருநாளை முன்னிட்டு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகியிருக்கிறது. இரு தரப்பு ரசிகர்களும் மிகப் பெரிய அளவில் இந்த இரு படங்களையும் கொண்டாடி வருகின்றனர். கலவையான விமர்சனங்களைப் பெற்ற இரண்டு படங்களும் பொங்கல் திருநாளில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியைச் சுவைக்க காத்திருக்கின்றன.
இதனிடையே கொண்டாட்டம் மரணத்தில் முடிந்த சோகம் உள்பட பல விசயங்கள் நடந்துள்ளன. சில இடங்களில் சுவாரஸ்யமான விசயங்களும் கூடவே முகம் சுளிக்கத்தக்க செயல்களும் நடந்துள்ளன.
சென்னை ரோகினி திரையரங்கில் படம் பார்க்க வந்த இளைஞர் லாரி மீது ஏறி ஆடி கீழே விழவே, அவர் மரணமடைந்த செய்தி அனைவரையும் வருத்தப்பட வைத்துள்ளது.
திருநெல்வேலியில் இருதரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் கொண்டாடச் செய்யும்படி, அஜித், விஜய் இருவரது கட் அவுட் களையும் சிறப்பாக செய்து வைத்திருந்தனர். மேலும் ஒரே பேனரில் இரு திரைப்படங்களுக்கும் வாழ்த்து தெரிவித்த அஜித் ரசிகர்கள் விசயமும் கொண்டாடப்பட்டது.
துணிவு படத்தை திரையிட்ட ஒரு திரையரங்கில் இடைவேளையின்போது வாரிசு பட பாடல் ஒலிபரப்பானதால் களேபரம் நிகழ்ந்துள்ளது. துணிவு படத்தின் இடைவேளையில் அனைவரும் ஸ்நாக்ஸ் வாங்க எழுந்து சென்ற நிலையில், வாரிசு படத்தில் இடம்பெற்ற தீ தளபதி பாடலை போட்டிருக்கிறார்கள். இதனால் திரையின் மீது செருப்பை கழற்றி வீசி கூக்குரலிட்டு அறுவறுக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டனர்.
இரண்டு படங்களும் ஒரே திரையரங்கில் அடுத்தடுத்து போடப்படுவதால் வந்த குழப்பத்தில் வாரிசு பட பாடலை போட்டிருக்கின்றனர். ஆனால் இதற்கு அஜித் ரசிகர்கள் ஏன் இப்படி நடந்துகொண்டார்கள் என்பதுதான் கேவலமான விசயமாக பார்க்கப்படுகிறது.
நாகர்கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜில்லா படம் திரையிட்ட திரையரங்கு ஒன்றில் அஜித், விஜய் பாடல்கள், மாறி மாறி ஒலிபரப்பப்பட்டன. அப்போது இருதரப்பு ரசிகர்களும் மகிழ்ந்தனரே தவிர இப்படி சண்டை போடவில்லை. சகிப்புதன்மை இப்போதுள்ள இளைய தலைமுறையினரிடம் இல்லை என்றே தோன்றுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…