சென்னை: பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுடன் விஜய் இன்று சந்திப்பு நிகழ்த்தி சான்றிதழையும், ஊக்கத்தொகையையும் வழங்கினார்.
லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு இப்போது சென்னை ஷெட்யூலில் படக்குழு தீவிரமாக பணியாற்றிவருகிறது. சமீபத்தில்தான் ஆதித்யராம் ஸ்டூடியோவில் செட் போடப்பட்டு 2000 நடன கலைஞர்களுடன் விஜய் நடனம் ஆடும் பாடல் காட்சி பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் இந்த பாடல் ஷூட்டிங் முடித்த கையோடு விஜய் இரண்டு நாட்கள் ஷூட்டிங்கிலிருந்து பிரேக் எடுத்தார். முழு வேகத்தோடு லியோ ஷூட்டிங்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்த விஜய் எதற்காக திடீரென பிரேக் எடுத்தார் என்ற கேள்வி அவரது ரசிகரக்ளிடம் எழுந்தது. ஆனால் விஜய் ரெஸ்ட் எடுப்பதற்காக பிரேக் எடுக்கவில்லை வேறு ஒரு வேலையை செய்வதற்காகத்தான் பிரேக் எடுத்தார் என்பது பின்னர் தெரியவந்தது.
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மூன்று பேரை விஜய் சந்தித்து சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை வழங்கவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே அதுதொடர்பான ஏற்பாடுகள் எந்த அளவில் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஷூட்டிங்கில் பிரேக் எடுத்து தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்தினார். நிகழ்ந்த சந்திப்பு: இந்நிலையில் விஜய் அறிவித்தபடி இன்று மாணவ,மாணவிகளை நீலாங்கரையில் சந்தித்தார். தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா என்ற பெயரில் அவர்களுக்கு சால்வை அணிவித்து சான்றிதழையும், ஊக்கத்தொகையும் வழங்கினார். மாணவ, மாணவிகளுடன் அவர்களது பெற்றோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். முன்னதாக கட் அவுட்டுகள் எதுவும் வைக்கக்கூடாது என விஜய் ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டதால் கட் அவுட்டுகளோ, பேனர்களோ வைக்கப்படவில்லை.மாறாக சுவரில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
விஜய் பேச்சு: சந்திப்பின்போது மேடையில் பேசிய நடிகர் விஜய், ‘தேர்வில் வெற்றி பெறாதவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். அவர்களுக்கு தைரியத்தை கொடுங்கள். குணத்தை இழந்தால் அனைத்தையுமே இழந்த மாதிரி. இதற்கு பிறகு நீங்கள் வெவ்வேறு ஊர்களுக்கு, பள்ளிகளுக்கு செல்லலாம். ஹாஸ்டலில் தங்கி படிக்கும் சூழல் உருவாகலாம். அப்போது ஒரு சுதந்திரம் கிடைக்கும். அந்த சுதந்திரத்தை முறையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களால் முடியாது என்று பலர் சொல்வார்கள். அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாதீர்கள். உங்களுக்குள் ஒருவனோ, ஒருத்தியோ இருப்பார். அதை கேளுங்கள். பெரியார், அம்பேத்கர், காமராஜரை படியுங்கள். நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு மாணவரும், மாணவியும் தங்கள் அப்பா, அம்மாவிடம் இனி நீங்கள் பணம் ஓட்டு போடாதீர்கள் என சொல்லுங்கள். நீங்கள் சொன்னீங்கனா அது நடக்கும். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…