அஜித்துக்காக எழுதப்பட்ட கதை ஒன்றில் விஜய் நடித்து, அந்த படம் வேறு லெவலுக்கு பேசப்பட்டு, விஜய்யின் சினிமா முகத்தையே மாற்றியது. அதுதான் திருமலை படம்.
திருமலை படத்தின் இயக்குநர் ரமணா இதுகுறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். அதில் திருமலை கதை அஜித்துக்காக எழுதப்பட்டது என்றும், அஜித்திடம் அந்த கதையை சொல்லமுடியாத நிலையில், விஜய்யை சந்தித்து கதை கூறி ஒப்பந்தமாகி படத்தை எடுத்ததாகவும் கூறியுள்ளார் திருமலை.
அஜித்துக்காக எழுதப்பட்ட பல கதைகளில் சூர்யா, விஜய் நடித்து அந்த படங்கள் ஹிட் ஆகியும் இருக்கிறது. வேறொருவருக்காக எழுதப்பட்ட கதையில் அஜித் நடித்து சில படங்கள் தோல்வியிலும் முடிந்துள்ளது. கதை ஒருவருக்காக எழுதப்பட்டாலும் அவர்களின் கால்ஷீட் கிடைக்காமல் வேறொரு நடிகரை வைத்து எடுப்பது சகஜம்தான் என்றாலும், மிஸ் ஆன படத்தை நினைத்து ஹீரோக்கள் பெரிய அளவில் வருத்தப்படுவதில்லை. அதேநேரம் விஜய் திருமலை படத்தில் நடித்து ஆக்ஷன் ஹீரோவாக பிரபலமானார்.
முன்னதாகவே தீனா படத்தில் அஜித் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருந்ததால் அவரை நினைத்து இந்த படத்தை எழுதியிருக்கிறார் ரமணா.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…