Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

AK 62 தாமதமாவதற்கான காரணம் இதுதான்? வெளியில் கசிந்த உண்மை என்ன?

UDHAYA KUMAR Updated:
AK 62 தாமதமாவதற்கான காரணம் இதுதான்? வெளியில் கசிந்த உண்மை என்ன?Representative Image.

அஜித்குமார் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கிய துணிவு திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் படமானது. பலரும் இந்த படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினர். இந்நிலையில், இதை விட பெரிய படத்தைக் கொடுக்க வேண்டும் என அஜித் போட்டிருந்த கணக்கு எல்லாம் தவிடுபொடியானது. விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அஜித்குமார் 62 படத்தை இயக்குவது யார் என்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் படம் தொடங்கியிருந்தார் நிச்சயம் பொங்கல் முடிந்த கையோடு துவங்கி, பிப்ரவரியில் ஷூட்டிங்க் லோகேஷனுக்கே சென்றிருக்க வேண்டும். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கவில்லை எனும் தகவல் வெளியாகியுள்ளது. அதை ஆமோதிக்கும் வகையில் அவரே அஜித் புகைப்படத்தை தனது டிவிட்டர் கணக்கிலிருந்து நீக்கிவிட்டார். 

அஜித்குமாருக்கு விக்னேஷ் சிவன் மீது கோபம் என்றும் பலர் பேசி வருகின்றனர். இந்த கோபத்தை தணிக்க நயன்தாரா அஜித்திடம் பேசினாராம். ஆனாலும் அஜித் பிடி கொடுக்காததால், நேரடியாக லைகா தரப்பில் பேச முயன்றிருக்கிறார். அஜித்தை மீறி நாங்கள் எதுவும் செய்ய முடியாது என கைவிரிக்கவே நயன்தாராவும் அப்செட் ஆகியிருக்கிறார். 

லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் நிச்சயம் ஒரு படம் செய்யட்டும் ஆனால் அஜித்தின் கோபத்துக்கு நாங்கள் ஆளாக முடியாது என கூறிவிட்டனராம். இதனால் விக்னேஷ் சிவன் மீது நயன்தாராவும் வருத்தத்தில் இருக்கிறாராம். சரி இது இருக்கட்டும் அதுதான் அடுத்த இயக்குநரைத் தேர்ந்தெடுத்தாயிற்றே அதை ஏன் அறிவிக்கவில்லை என கேட்டதற்கு அதற்கும் ஒரு முட்டுக்கட்டை இருப்பது தெரியவந்துள்ளது. 

மகிழ் திருமேனிதான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். அதை அறிவிக்க ஏன் தாமதம் என அஜித் தரப்பில் விசாரிக்க முயன்றோம். ஆனால் யாரும் பிடி கொடுக்காததால் தயாரிப்பு தரப்பில் விசாரிக்க முடிவு செய்தோம். அங்கு இருந்த வந்த தகவலின்படி, அஜித் இன்னும் ஸ்ட்ராங்கான ஸ்க்ரிப்டை எதிர்பார்க்கிறார் என்கிறார்கள். 

அவர் இந்த கதையில் முழுக்க முழுக்க ஆக்ஷன் சண்டை என இருக்க வேண்டும் என கூறியிருக்கிறாராம். மகிழ் திருமேனியும் அதற்கு சம்மதித்து கதையை மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார். இதனால் விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்