தமிழகத்தில் தக்காளி விலை தாறுமாறாக அதிகரித்துள்ள நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 2 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி, பச்சை மிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. அத்தியாவசிய காய்கறிப் பட்டியலில் இடம் பிடித்த தக்காளி கிலோ 120 வரை விற்கப்பட்டதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வேனில் கொண்டுவரப்பட்ட தக்காளி இரண்டு கிலோ 100 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டதால், பொதுமக்கள் போட்டிபோட்டுக்கொண்டு தக்காளியை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்
சந்தை மற்றும் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், சாலையோரம் வாகனத்தில் 50 ரூபாய்க்கு தக்காளி விற்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. இது குறித்து பேசிய தக்காளி வியாபாரிகள், அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் உள்ள விவசாயிகளிடம் இருந்து தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்வதால், குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்வதாகத் தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…