Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேலூரில் 2 கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை - போட்டிபோட்டு வாங்கிச் சென்ற மக்கள்..!!

Saraswathi Updated:
வேலூரில் 2 கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை - போட்டிபோட்டு வாங்கிச் சென்ற மக்கள்..!! Representative Image.

தமிழகத்தில் தக்காளி விலை தாறுமாறாக அதிகரித்துள்ள நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 2 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி, பச்சை மிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. அத்தியாவசிய காய்கறிப் பட்டியலில் இடம் பிடித்த தக்காளி கிலோ 120 வரை விற்கப்பட்டதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வேனில் கொண்டுவரப்பட்ட தக்காளி இரண்டு கிலோ 100  ரூபாய் என விற்பனை செய்யப்பட்டதால், பொதுமக்கள் போட்டிபோட்டுக்கொண்டு தக்காளியை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்

வேலூரில் 2 கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை - போட்டிபோட்டு வாங்கிச் சென்ற மக்கள்..!! Representative Image

சந்தை மற்றும் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், சாலையோரம் வாகனத்தில் 50 ரூபாய்க்கு தக்காளி விற்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.  இது குறித்து பேசிய தக்காளி வியாபாரிகள், அண்டை மாநிலமான ஆந்திரா  மற்றும் கர்நாடகாவில்  உள்ள விவசாயிகளிடம் இருந்து தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்வதால், குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்வதாகத் தெரிவித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்