குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியில் ஹெடல் மற்றும் விஷால் ராணாபாய் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமண நாளின் போது சடங்குகள் செய்யும் நேரத்தில் மணப்பெண்ணிற்கு மூச்சு திணறல் வந்துள்ளது. சற்று இயற்கை காற்றை சுவாசிக்க மாடிக்கு சென்ற மணப்பெண் அங்கேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். சிறிது நேரம் ஆகியும் திரும்ப வராததால் அவரை தேடி வந்த உறவினர்கள் மணப்பெண் மயங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
எவ்ளவோ முயற்சித்தும் மணப்பெண் மாரடைப்பால் இறந்துவிட்டார். கோலாகலமாக நடைபெற இருந்த திருமணம் துக்கத்தால் சூழ்ந்தது. இருப்பினும் வீட்டின் கௌரவித்திற்காக இறந்து போன மணப்பெண்ணின் தங்கையை விஷால் அவர்களுடன் திருமணம் செய்து வைத்து விட்டனர் பெற்றோர்கள். திருமணம் நடந்து முடியும் வரை ஹெடலின் உடலை குளிரூட்டும் பெட்டியில் வைத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…