இந்தியாவிலே 19 மாதங்களில் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வாங்கிய ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சனம் செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் படைவீடு பேரூராட்சி சார்பில் அதிமுக ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் பங்கேற்று திமுக அரசின் சொத்துவரி மின்கட்டண உயர்வு விலைவாசி உயர்வு உள்ளிட்ட வரி உயர்வுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை ஈடுபட்டனர்.
இதற்கு முன்னதாக தொண்டர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தெரிவித்த நகை கடன், கல்வி கடன், மகளிர் குழு கடன் ஆகிய முறையாக தள்ளுபடி செய்யவில்லை என்று கூறினார். மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் கட்டுமான பொருட்களின் விலை ஏற்ற நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புகார் கூறினார்.
சட்டமன்ற கூட்டத்தொடரின் போது அதிமுக உறுப்பினர்கள் குட்கா கஞ்சா உள்ளிட்ட போதை விற்பனை குறித்து பலமுறை வலியுறுத்தியும் திமுக அரசு இதுவரை போதை பொருட்கள் நடவடிக்கை கட்டுப்படுத்த தவறி விட்டதாக குற்றம் சாட்டினார். இப்பகுதி விசைத்தறி தொழில் நிறைந்த பகுதியாக இருப்பதால் தமிழக அரசின் மின் கட்டண உயர்வால் விசைத்தறி தொழில் மிகுந்த பாதிப்பு ஏற்படுவது உடன் நூற்பாலை உரிமையாளர்கள் தொழிலை மேற்கொள்ளாத அளவில் சூழல் இருப்பதாக வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவிலே ஆட்சிப் பொறுப்பேற்று 19 மாதம் மக்கள் மத்தியில் அவப்பெயரை பெற்ற ஒரே கட்சி திமுக ஆட்சி தான் என முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சனம் செய்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…