அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானரகத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் பல்வேறு தடங்கலுக்கு பிறகு இந்த பொதுக்குழு நடைபெற இருந்தது இதில் கலந்துகொள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மேடைக்கு வந்தனர்.
அப்போது இந்த பொதுக்குழு கூட்டத்தை தமிழ்மகன் உசேன் முன்னிலையில் நடத்த ஓபிஎஸ் முன்மொழிந்தார், அதனை ஆமோதித்து எடப்பாடி பழனிச்சாமி வழிமொழிந்தார். பின்னர் மேடையில் இருந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் திடீரென எழுந்து பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம் என ஆவேசமாக கத்தினார்.
பின்னர் பேசிய கே.பி. முனுசாமி எழுந்து அணைத்து உறுப்பினர்களும் தீர்மானங்களையும் நிராகரித்ததால் தற்போது தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்பட்டது மேலும் அனைவரின் வேண்டுகோளான ஒற்றை தலைமையை முன்மொழிந்து அடுத்த பொதுக்குழு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…