மாபெரும் மக்கள் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் தற்போது சர்வாதிகாரப்போக்கும் மற்றும் அராஜகமும் நிலவி வருகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
மேலும் இந்த அராஜக போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மகளிர் அணியினர் அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தருணத்தில், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி அவரது நினைவிடத்தில் தியானம் செய்த அவர் இதே தர்மம் வெல்லும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாளை (ஜூன் 23) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது, அதிமுக தொண்டர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் என ஓபிஎஸ் அணி மற்றும் இபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்து ஒற்றை தலைமை குறித்து வலியுறுத்தி வரும் நிலையில் ஓபிஎஸ்ன் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மேலும் ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழு கூட்டத்தை இன்னும் சிறிது நாட்கள் தள்ளி வைக்கலாம் என கோரிக்கை வைத்தவரும் நிலையில் இபிஸ் தரப்பு அதற்கு செவி சாய்க்க மறுத்து திட்டமிட்டபடி பொதுக்குழு 23 ஆம் தேதி நடைபெறும் என தறிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…