Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கவர்னர் ஆர்.என்.ரவியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து மனு!

Surya Updated:
கவர்னர் ஆர்.என்.ரவியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து மனு!Representative Image.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, அதிமுக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பெஞ்சமின், விஜயபாஸ்கர் ஆகியோர்  கவர்னரை சந்தித்து, இந்த மனுவை அளித்துள்ளனர்.  சென்னையில் உள்ள கிண்டி ராஜ்பவனில் மனு அளித்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், கவர்னர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறுகையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது  நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். அவரை நீதிமன்ற காவலில் எடுத்தும் இதுவரை அமைச்சராக தொடர்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை எனவும் அவர் கூறினார்.

வருமானவரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்த சென்ற பொழுது பெண் அதிகாரிகளைத் தாக்கியதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குற்றம் சாட்டினர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்