சென்னை: திமுக அமைச்சரவையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க கோரி ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க, அதிமுக சார்பில் ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…