தமிழகத்தில் இன்று முதல் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இன்று மாலை சென்னை வருகிறார்.
இந்நிலையில், சென்னை வரும் மோடியை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, மோடி - எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் போது எல்லோரையும் இணைந்து செயல்படும் படி செல்வார் என கூறப்படுகிறது. ஆனால் மோடியின் சமரச திட்டத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா? என்பது தெரியவில்லை.
மேலும், 2024 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக கட்சிக்குள் ஒற்றுமை முக்கியம் என்பது குறித்து பேசி சமரசம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறுகையில், “ அதிமுக கட்சியின் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்பதான் முடிவு செய்வோம். ஆனாலும், அதிமுகவில் ஓ.பி.எஸ். சசிகலா, தினகரன் உள்ளிட்ட யாரையும் இணைக்கப் வழி இல்லை. மேலும், மோடி சமரசம் செய்தாலும் அதை ஏற்க நாங்கள் தயாராக இல்லை” என தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…