Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மேலும் ஒரு மூத்த தலைவர் விலகல்.. காங்கிரஸுக்கு அடுத்த அதிர்ச்சி!!

Sekar August 21, 2022 & 19:17 [IST]
மேலும் ஒரு மூத்த தலைவர் விலகல்.. காங்கிரஸுக்கு அடுத்த அதிர்ச்சி!!Representative Image.

இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா இன்று, அக்கட்சியின் வழிநடத்தல் குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். 

ஆனந்த் சர்மா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், தனக்கு சுயமரியாதை முக்கியம் என்பதால் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மிக உயரிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் ஆனந்த் சர்மா, கட்சியின் எந்தக் கூட்டத்திற்கும் தன்னைக் கலந்தாலோசிக்காததால் அல்லது அழைக்கப்படாததால், தனது சுயமரியாதையை புண்படுத்தியதாக சோனியா காந்தியிடம் தனது கடிதத்தில் கூறியதாக கூறப்படுகிறது. 

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக முயற்சிக்கும் இந்த வேளையில் ஆனந்த் சர்மா விளங்கியுள்ளது கட்சியினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1982 இல் முதன்முதலில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஆனந்த் சர்மா, 1984 இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் ராஜ்யசபா எம்பி ஆனார். அன்றிலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக இருந்து கட்சியில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

ஜி23 குழுவின் மற்றொரு தலைவரான குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீரில் பிரச்சாரக் குழுத் தலைவர் பதவியிலிருந்து சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தற்போது ஆனந்த் சர்மாவும் விளங்கியுள்ளது கட்சிக்குள் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்