Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

“ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை” சீமான் காட்டம்.

Muthu Kumar August 21, 2022 & 11:20 [IST]
“ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை” சீமான் காட்டம்.Representative Image.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அடிக்கடி ந்ந்ற்படும் விபத்தில் சிக்கி மீனவர்கள் உயிரிழந்து வருவதால் துறைமுக மறுசீரமைப்பு பணியை உடனே தொடங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்நிலையில், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை நேற்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார். 

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், “மீன்பிடித் துறைமுகங்களுக்கு முகத்துவாரத்தின் அகலம் குறைந்தபட்சம் 300 மீட்டர் இருக்க வேண்டும். ஆனால் இந்த துறைமுகத்தில் 80 மீட்டர் அகலத்தில் முகத்துவாரப் பகுதி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிர் இழப்புகள் ஏற்படுகிறது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை உடைத்து கேரள துறைமுகங்களுக்கு அனுப்புகின்றனர். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை” என தெரிவித்தார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்