இம்பால்: மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டோரை நேரில் காண சென்ற ராகுலின் பயணத்தை பாராட்டுவதாக அம்மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் மெய்டி மற்றும் கூகி சமூக மக்கள் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே மாதம் 3ஆம் தேதி முதல் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் விவகாரம் கலவரமாக மாறியதால் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேரில் சென்றார். மாநில எல்லையில் அம்மாநில போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதற்கு காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவர் மணிப்பூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
ராகுலின் இந்த பயணம் குறித்து அம்மாநில பாஜக தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தற்போதைய சூழ்நிலையில் மணிப்பூருக்கு வந்த ராகுலை நான் பாராட்டுகிறேன். எவ்வாறாயினும் நிலைமையை சரிசெய்து அமைதியை மீண்டும் கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது. மணிப்பூர் மக்கள் முதல்வர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். மாநிலத்தில் நிலவி வரும் நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையில் தான், மக்கள் முதல்வருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். மேலும் மாநிலத்தின் தற்போதைய நிலை ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் தான் காரணம் என காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…