Perarivalan release : பேரறிவாளன் விடுதலையை பாஜக ஏற்றுக் கொள்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலை
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து பல அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அண்ணாமலை ட்வீட்
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது என்றும், நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதேபோல் நடிகையும் பாஜக பிரபலமுமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பேரறிவாளனின் விடுதலைக்கு ஆதரவை தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…