தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவப் பரிசோதனைகள் முடிவடைந்து இன்று வீடு திரும்புவார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சர்கள், உயர்அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுவந்த நிலையில், இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவச் சேவை இயக்குநர் வெங்கடாசலம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…