Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமைச்சர் நீக்கம் செய்யும் விவகாரத்தில் முதல்வர் இரட்டை வேடம்:அண்ணாமலை விமர்சனம்

Baskarans Updated:
அமைச்சர் நீக்கம் செய்யும் விவகாரத்தில் முதல்வர் இரட்டை வேடம்:அண்ணாமலை விமர்சனம்Representative Image.

சென்னை: அமைச்சர் நீக்கம் குறித்து ஆளுநருக்கு உரிமை இருக்கா?இல்லையா?? என்பதில் உள்ளே செல்ல பாஜக விரும்பவில்லை எனவும், அமைச்சர் நீக்கம் செய்வது குறித்து முதல்வர் இரட்டை வேடம் போடுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சரை நீக்க உரிமை இருக்கா? என்பதில் பாஜக உள்ளே செல்ல விரும்பவில்லை. ஆனால்  மு.க ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கடந்த காலங்களில் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால்  எதிர்கட்சி வரிசையில் இருந்த ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகு எப்படி எதிர்க்கிறார். ஏன் தெரியவில்லை எனவும் முதல்வர் இரட்டை வேடம் போடுவதாக தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் படி ஆளுனர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். செந்தில் பாலாஜி ஊழல்வாதி என்பது முதல்வருக்கு தெரியும். ஆனால் முதல்வர் வரம்பு மீறி செயல்படுகிறார்.

முதல்வரின் கவனம் ஐந்தாண்டுகளில் எப்படி மாறியுள்ளது. ஏன் என்று தெரியவில்லை.
ஆளுனர் சார்பாக நாங்கள் பேச முடியாது. ராஜ்பவன் வேறு. பாஜக வேறு.. ஆனால் கடிதத்தை படிக்கும் போது என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன் என்றார்.தமிழ்நாடு அமைச்சரவையில் 99% அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது.

பலருக்கு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.ஆளுநர் அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில் பாலாஜி மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு இல்லை எனவும்  அவர் செய்த குற்றித்தின் மீது தான் வெறுப்பு என்றார். இது தனிமனித தாக்குதல் கிடையாது.முதல்வர் நடந்து கொள்வது தர்மத்திற்கு விரோதமானது. ஒரு மனிதனுக்காக அரசங்கத்தை களத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.

கல் குவாரிகள் தமிழ்நாடு முழுவதும் ஸ்ட்ரை செய்துள்ளனர்.  கரூரில் கட்சிவாரியாக குவாரிகள் இயங்கி வருகிறது. ஆனால் ஆட்சிக்கு வரக்கூடிய கட்சி மற்ற கட்சிகளை பழி வாங்குகிறது. இதை அரசு சரி செய்ய வேண்டும். மேலும் செந்தில் பாலாஜியின் தம்பி தலைமறைவு. அமலாக்கத்துறை விசாரிக்க விடமால் அரசு உதவுகிறது.

சிதம்பரம் கோவில் பற்றி பொதுப்பார்வை இல்லாமல் இருக்கிறது. பொட்டு தீக்சர் கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரம் கோவில் உள்ள நிலையில், மாநில அரசு கோவிலை கட்டுபடுத்த நினைக்கிறது.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மீறி அரசங்கம் செயல்படுகிறது. மாநில அரசு அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காதீர்கள். மீறி கொடுத்தால் கோவில் முன்பு நானே பேராட தயங்கமாட்டேன் என்றார். வருகின்ற ஜீலை 28ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து நடைபயணத்தை தொடங்கவுள்ளேன்.

அமித்சா தொடங்கி வைக்கவுள்ளார். கட்சி நிகழ்வாக ஆப்ரிக்கா செல்ல இருப்பதாலும், உள்துறை அமைச்சரின் நேரம் கிடைக்க வேண்டி உள்ளதால் நடைபயணம் தாமதமாகிறது. மாமன்னன் படம் இன்னும் பார்க்கவில்லை எனவும் யார் மனதையும் புண்படுத்தமால் இருக்குமாறு எடுக்க வேண்டும் என்றார். நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு  நிஜத்தில் நான் நடிக்க தெரியாதவன் என்றார். விஜய் அரசியல் வருவதாக கூறும் கேள்விக்கு யாரும் வேண்டுமானால்  அரசியலுக்கு வர வேண்டும்.

விஜய் வந்தால் வரட்டும். மேலும் விஜய் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிக்கு கண்டனம் எழுந்தது குறித்த கேள்விக்கு படத்தில் புகைபிடிப்பதால் இளைஞர்கள் , குழந்தைகள் அதை பின்பற்றி கெட்டு போவாங்க என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். சாலையில் கூடதான் புகைப்பிடிக்க செய்கிறார்கள். அதை பார்த்து கெட்டு போகமாட்டார்களா??  ஆனால் மத்திய அரசின் விதி முறைகளை பின்பற்றி மறைக்க வேண்டியதை மறைத்து, வாசகங்களை போட்டு படத்தை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்