அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரை தரக்குறைவாக பேசி வரும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பெண்ணை மானபங்கப் படுத்திய வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் சிறை செல்ல வேண்டியவர் என கோவை செல்வராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒற்றை தலைமை பிரச்சனை தீவிரமடைந்து வரும் நிலையில், ஈபிஎஸ் அணியினர், ஒபிஎஸ்யையும், ஓபிஎஸ் அணியினர் ஈபிஎஸ்யையும் மாறி மாறி பேச்சால் தாகி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ், தலைமை கழகம் என்ற பெயரில் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இன்றி அழைப்பிதழ் வந்துள்ளது. ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்தில்லாமல் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்க யாருக்கும் அதிகாரமில்லை, தகுதியுமில்லை. வரும் 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழி எடப்பாடி பழனிசாமிக்கு தூதி பாடும் கூட்டமாக தான் இருக்கும் என தெரிவித்தார். மேலும் அதிமுகவில் நிலவும் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் எடப்பாடி பழனிசாமியும், டி.ஜெயக்குமாரும் தான் காரணம் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…