Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. தமிழ்நாட்டில் இத்தன பேர் ஆப்சென்டா?

Nandhinipriya Ganeshan October 18, 2022 & 11:00 [IST]
காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. தமிழ்நாட்டில் இத்தன பேர் ஆப்சென்டா?Representative Image.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நாடு முழுவதும் நடந்தது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே - சசிதரூர் இரண்டு பேரும் போட்டியிட்டனர். நேற்று காலையில் 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகங்களிலும் வாக்களிக்க தகுதியுடைய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் வாக்களித்தனர். மேலும், டெல்லியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி , பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர். 

தமிழ்நாட்டில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில் வாக்கு பதிவு நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி உடன் நிறைவடைந்தது. இதில் தமிழ்நாட்டில் 662 வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

தமிழ்நாட்டில் 711 பேர் வாக்களிக்க தகுதியான நிலையில் 662 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருக்கின்றன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரதாப் பானு சர்மா தெரிவித்திருக்கிறார். 49 பேர் ஆப்சென்ட் ஆகி இருக்கின்றனர். பின்னர், வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குப் பட்டியல்கள் சீல் இடப்பட்டு விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்