ஆன்லைன் ரம்மி குறித்து தான் கூறிய கருத்துக்கள் தவறாக பரப்பப்படுவதாக நடிகர் சரத்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜரத்தினம் அரங்கத்தின் அருகே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போதை பொருட்கள் ஒழித்திடவும்,பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது அப்போது மேடையில் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார்,
ரம்மி விளையாடுவதற்கு அறிவு வேண்டுமா? என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார் அதற்கு ஆமாம் என்று கூறினேன் அதற்குள் ரம்மி விளையாட அறிவு வேண்டும் என சரத்குமார் கூறியாதாக பத்திரிகையில் போடுகிறார்கள்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியது வேறு, தற்போது வெளியிடுவது வேறாக உள்ளது. ரம்மியை நான் உருவாக்கவில்லை. 25 சதவீதமக்கள், வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள்.மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சுகாதாரம்மற்ற சூழலில் மக்கள் வாழ்கிறார்கள்
பெற்றோர்கள் பாசத்தை செலுத்துவதால் தான் குழந்தைகள் கெட்டு போகிறார்கள்.பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்.. மதுவிலக்கு சாத்தியமா என கேட்டால் கஷ்டம் தான், ஏனெனில் அதில் இருந்து 36 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. நடக்காது என்பதற்காக அதை தொடர முடியுமா?. ரம்மி விளம்பரம் 2 ஆண்டுகள் முன் நடந்தது. ஆனால் தற்போது மது விலக்கு போராட்டம் செய்தி வெளிவரக்கூடாது என திசை திருப்புவதாக நான் கருதுகிறேன்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…