மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து ட்விட்டரில் அவதூறு பதிவு வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யாவிற்கு ஜாமின் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்தும் பாஜக மாநில செயலாளர் SGசூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை மாநகர சைபர்கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் வைத்து பாஜக மாநில செயலாளர் SGசூர்யாவை காவல்துறையினர் கைது செய்த நிலையில் சனிக்கிழமை அன்று SG சூர்யாவிற்கு ஜூலை 1 ஆம் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் SG சூர்யாவை காவல்துறை விசாரணை கோரிய வழக்கில் இன்று மதியம் மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்றத்தில் நீதிபதி டீலா பானு முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். சைபர் கிரைம் காவல்துறை சார்பில் சூர்யாவை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய வழக்கின் இடையே சூர்யாவிற்கு ஜாமின் அளிக்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குறுக்கீட்டு வாதம் செய்யப்பட்ட போது சூர்யாவின் பதிவு இரு சமூகத்தினரிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததாகவும் தெரிவித்து சூர்யாவிற்கு ஜாமின் வழங்க கூடாது எனவும், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரியும் குறுக்கீட்டு வாதம் செய்தனர். இதனையடுத்து இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி டீலாபானு பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யாவிற்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…