அமைச்சர் செந்தில் பாலாஜி கைதின்போது மனித உரிமை மீறப்பட்டதாக கூறப்பட்ட புகார் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், உயர்நீதிமன்ற உத்தரவின் படி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜி கைதின் போது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், சட்ட நடைமுறைகளின் படி அவருக்கு உரிய நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்றும், கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும், குற்றம் சாட்டி அமலாக்கத் துறைக்கு எதிராக அவரது மனைவி மேகலா தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாநில மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…