Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மகளிர் உரிமை தொகை திட்டம் சந்தேகம் தான்.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்! | Magalir Urimai Thogai

Baskaran. S Updated:
மகளிர் உரிமை தொகை திட்டம் சந்தேகம் தான்.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்! | Magalir Urimai Thogai Representative Image.

சென்னை: ஊழல் குறித்து பேசுவதற்கு அமைச்சர் ரகுபதிக்கு எந்த தகுதியும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறுகையில், 2024நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அதிமுக தொடங்கி விட்டது. பூத் கமிட்டி உள்ளிட்ட பணிகள் தொடங்கி விட்டது. ஆளுநர் ரவி ஏன் டெல்லி சென்றார் என்பது எனக்கு தெரியாது.

நாங்கள் ஆட்சியில் இருந்த போது காவலர்களின் மனஅழுத்ததை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். காவலர் நல்வாழ்வு திட்டத்தை அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும். மன அழுத்ததில் உள்ளவர்களுக்கு ஏன் அதிக பணிகளை வழங்குகிறீர்கள்.  

குறிப்பாக டிஐஜி விஜயகுமாருக்கு 6 மாத காலமாக மன அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டு உள்ள ஒருவரிடம் ஊழல் தடுப்பு பிரிவு உள்ளது. அமைச்சர் ரகுபதிக்கு ஊழல் குறித்து பேச எந்த தகுதியும் இல்லை. அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. திமுக அரசு அறிவித்துள்ள உரிமை தொகை திட்டம் நடைமுறைக்கு வருவது என்பது சந்தேகம் தான், என்றார்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்