தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 500க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பொறுப்புகளுக்கான தேர்தலை அதிமுக வேறு வழியில்லாமல் தவறவிடுகிறது. உட்கட்சி தகராறால் கட்சியின் செல்வாக்கு குறைவதாக தொண்டர்களும் நிர்வாகிகளும் குமுறி வருகின்றனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 500-க்கும் மேற்பட்ட மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய குழு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் இன்று மாலை 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்களில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட வேண்டும்.
ஆனால் அந்த கட்சியில் நடந்துவரும் உட்கட்சி பிரச்சனையால் ஓ.பன்னிர்செல்வம் கையெழுத்திட மறந்துவிட்டார். மனுவில் கையெழுத்திட எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்து அதனை ஓபிஎஸ் மறுத்துவிட்டார். இதன் காரணமாக இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. வேறு வழியில்லாமல் அதிமுக-வினர் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுமாறு எடப்பாடி பழனிசாமி தொண்டர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
இதனால் கட்சியின் சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உங்கள் சண்டையினால் கட்சி சின்னத்தை தவறவிடலாமா?”, என அதிமுக தொண்டர்கள் குமுறுகிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…