ஒன்றிணைந்து செயல்படுவோம் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். அதில், 'நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்' என்றும், மனக்கசப்பை எல்லாம் மறந்து அதிமுக மீண்டும் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்தார். மேலும், அவர் இப்படித்தான் அடிக்கடி அழைப்பு விடுப்பார், யாரை எதிர்த்து தர்ம யுத்தம் சென்றாரோ அவருக்கும் சேர்த்தே அழைப்பு விடுக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவை சிலர் தன் வசம் கொண்டுபோக நினைக்கிறார்கள் என்றும், பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் ஓ.பன்னீர்செல்வம், எப்படியாவது பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி அழைப்புவிடுக்கிறார் என்றார். மேலும், தானும் தன் மகனும் பதவியில் இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். கட்சியில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டால் மக்களிடம் அதிமுக மீது எப்படி நம்பிக்கை ஏற்படும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து பொதுக்குழு செல்லாது என்ற தனிநீதிபதி தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…