தவறான மருத்துவ அறிவுரைகளை வழங்கியதாக புகார் எழுந்த நிலையில், சித்த மருத்துவ ஷர்மிகா 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க இந்திய மருத்துவ முறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
யூடியூப் உள்ளிட்ட சோசியல் மீடியாவில் அழகு குறிப்புகள் மற்றும் எடை இழப்பு சம்பந்தமான டிப்ஸ்கள் மூலமாக பிரபலமானவர் சித்த மருத்துவர் ஷர்மிகா. பாஜக நிர்வாகியான டெய்சி சரண் என்பவரது மகளான இவர் கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய மற்றும் தவறான மருத்துவ தகவல்களை தனது பேட்டிகள் மூலமாக பகிர்ந்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் குவிந்தன.
பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்த இவர் மாட்டை நாம் தெய்வமாக பார்க்கிறோம். நம்மை விட பெரிய விலங்கைச் சாப்பிட்டால் நமக்கு செரிமான பிரச்சனைகள் வரும்... குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும்... நுங்கு சாப்பிட்டால் பெண்களின் மார்பகம் பெரிதாகும்... என்றெல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகாத தகவல்களை வாய்க்கு வந்தபடி உளறி வந்தார்.
கர்ப்பம் தரிப்பது, உணவு பழக்கங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில், இணையத்தில் அவர் வெளியிட்டு இருந்த சிலர் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது தவறான தகவலை பரப்புகிறார் என இமெயில் மூலமாக இந்திய மருத்துவ இயக்குனரத்திற்கு புகார்கள் குவிந்துள்ளது.
இதனையடுத்து சித்த மருத்துவர் ஷர்மிகா 15 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி புகார்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…