ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆளுங்கட்சியில் இணைவது வழக்கமான ஒரு விஷயம் தான். அந்த வகையில், சென்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.
இதற்கு காரணம், கொஞ்சம் நாட்களாகவே அதிமுகவில் நிகழும் ஒற்றை தலைமை விவகாரம் தான். இந்த ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல் வெடித்துவருகிறது. இதனால், அதிருப்தி அடைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஆளுங்கட்சியில் இணைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில், அதிமுகவைச் சேர்ந்த பூம்புகார் தொகுதி முன்னால் எம்எல்ஏ ஏ.சி.என். விஜயபாலன், சீர்காழி தொகுதி முன்னாள் எம்எல்ஏ து. மூர்த்தி ஆகியோர் தலைமையில் அம்மா பேரவை ஒன்றிய தலைவர் எம்.ரமேஷ், செம்பனார்கோவில் செல்வராஜ், சுரேஷ்குமார், சரவணன் மற்றும் நாகை மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளரும், பரசலூர் ஊராட்சி மன்றத் தலைவருமான செம்பை த.சண்முகம் ஆகியோர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை ஆகியோரும் உடனிருந்தனர். முக்கிய எம்எல்ஏக்கள் திமுகவில் இணைந்ததால் ஓபிஎஸ், இபிஎஸ் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…