தமிழகத்தில் பிரபல அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வந்த நிலையில் கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்துள்ளார்.
மேலும், இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அதிமுகவினர் யாரும் இல்லை என்றும் ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ பன்னீர்செல்வம் ஆட்களை நியமித்து வருகிறார்” என தெரிவித்துள்ளார்.
மேலும், மறைந்த தலைவர்களுக்கு நினைவுச்சின்னம் அமைப்பதற்கு பணம் இருக்கும் திமுக அரசுக்கு நலத்திட்டங்களுக்கு பணம் இல்லையா..? என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின் சொத்துவரி, விலைவாசி, மின்கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…