தமிழகத்தில் பிரபல அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வந்த நிலையில் கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்குவதாக ஈபிஎஸ் அறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அதற்கு எதிராக ஈபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக அவ்வபோது அறிவிப்பு வெளியிட்டார்.
இதனையடுத்து, தற்போது ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வைத்திலிங்கத்தை கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ளார். மேலும், வைத்திலிங்கம் கட்சியின் கழக இணை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோரும் கழக துணை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிறகும் ஓபிஎஸ் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருவது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…