Tamilnadu Politic News : தமிழ் திரைப்பட நடிகர் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று ரத்த தான தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சார்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் “கமல் பிலட் கம்யுன்” பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் தொடர்பாக கடந்த 40 ஆண்டுகளாக ரத்தம் தேவைப்படுவோருக்கு விரைவாக ரத்தம் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனை விரிவு படுத்தும் விதமாக “கமல் பிலட் கம்யுன்” திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு “கமல் பிலட் கம்யுன்” திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும், இந்நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் மூலம் இரத்தம் பெற வேண்டும் என்றாலும் இரத்ததானம் செய்ய விரும்பினாலும் 9150208889 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்வில் பேசிய கமலஹாசன், “உலகத்தை நம் சந்ததியினருக்கு விட்டுச் செல்வது நம் கடமை. உண்மையில் நடப்பவை பற்றிதான் நான் “விக்ரம் ” படத்தின் பாடலில் எழுதினேன். குறிப்பிட்ட எந்த ஒரு கட்சியை மட்டும் சாடவில்லை. அனைத்து ஒன்றியத்தையும் தான். எனக்கு தொழில் சினிமா தான். அரசியலுக்கு நான் சம்பாதிக்க வரவில்லை” என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…